×

அச்சிறுப்பாக்கம் அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டை உடைத்து நகை கொள்ளை

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அனந்தமங்கலம் சுப்பிரமணி (70). இவர், குடும்பத்துடன் அனந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வருகின்றார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்க சென்றனர். நேற்று அதிகாலை சுப்பிரமணி எழுந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி விஷயத்தை தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் வீடு முழுவதும் சுற்றிப்பார்த்தபோது மர்ம நபர்கள் யாரும் இல்லை.

இதன் பிறகு பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 10 சவரன் நகைகள் மற்றும் முக்கால் கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின்படி, ஒரத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், காஞ்சிபுரத்தில் இருந்து மோப்ப நாய் வரவைக்கப்பட்டது. பின்னர், வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி மோப்ப நாய் நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் கதவு, பீரோவில் பதிவாகியுள்ள மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அச்சிறுப்பாக்கம் அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டை உடைத்து நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : AIADMK union ,Achirpakkam ,Madhurantagam ,ADMK union ,
× RELATED அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர்...