×

சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில் கருவைக் கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 14 வயது சிறுமியின் 24 வார கருவைக் கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில் கருவைக் கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கருவைக் கலைக்க செய்ய வேண்டும் என்றால் அதற்கான உரிய சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

இது தொடர்பாக கொடுக்கப்பட்டிருந்தது வழக்கில் கருவைக் கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.தனது 14 வயது மகள் 24 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் அவரது தற்போதைய நிலையில் படிப்பை தொடர விரும்புகிறார்.

கர்ப்பத்தை சுமக்க விரும்பவில்லை என்று மகள் தெரிவித்திருக்கிறார். எனவே கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தபொழுது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த 24 வார கருவை இந்த சிறுமி சுமந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து அவர் சுமந்தால் அவர் உயிர்க்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற சூழ்நிலை இருக்கிறது.

எனவே அந்த கருவை கலைக்கலாம் என்று பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது, இந்த கருக்கலைப்பு சட்டவிதி குழு பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிறுமி சுமந்துகொண்டிருக்கக்கூடிய 24 வார கருவைக் கலைப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறார்.அதன் படி திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரண்டுவர காலத்திற்குல் அந்த கருவைக் கலைப்பதற்கு அனுமதி அளித்த நீதிபதி இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவு அளித்திருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்பாக இந்த வழக்கு வந்தபொழுது சிறுமியின் தந்தை தரப்பில் 14 வயதுதான் தான் மகளுக்கு ஆகிறது, உறவினர் ஒருவரால் தான் மகள் கர்பமடைந்து இருப்பதாகவும், தானும் தனது மனைவியும் வீட்டில் இல்லாத நேரத்தில் தான் மகளுடன் பழகி இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும், மகளுக்கு தெரியாமல் கரமடைந்திருப்பதால் இந்த கருவைக் கலைப்பதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று வாதிடப்பட்டது. அதேபோல் காவல்துறை தரப்பில் சம்மந்தப்பட்ட இளைஞர் மீது செங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில் கருவைக் கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Govt Hospital ,Chennai ,Chennai High Court ,Tiruvannamalai Government Hospital ,Court ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...