×

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் அதிகாரி மகளிடம் சில்மிஷம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, நேற்று மதியம் அரசு பஸ்சில் நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். இவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் 3 வாலிபர்கள் இருந்து உள்ளனர். அவர்கள், மாணவியிடம் தொடர்ந்து வம்பு செய்தவாறு இருந்தனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி மாணவியின் தலை முடியை பிடித்து இழுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வேறொரு இருக்கைக்கு மாறி சென்றார். பின்னர் பஸ், மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்ததும் மாணவி அவசர, அவசரமாக இறங்கினார். அவருடன் வேகமாக இறங்கிய வாலிபர்கள், திடீரென மாணவியிடம் உன்னை எங்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் பள்ளிக்கு அழைத்து செல்கிறோம் வா என்று கூறி கேலியாக பேசினர்.

இதை பார்த்த மாணவி, அருகில் இருந்த பெண் ஒருவரிடம் இருந்து செல்போனை வாங்கி தனது தந்தைக்கு போன் செய்தார். மாணவியின் தந்தை, மீன் வளத்துறையில் அதிகாரியாக உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, உடனடியாக தனது நண்பர்கள் உதவியுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அண்ணா பஸ் நிலையத்துக்கு போலீசார் விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சம்பந்தப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் பதற்றத்துடன் இருந்ததால், அவருக்கு ஆறுதல் கூறி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் வாலிபரில் ஒருவர், ஏற்கனவே மாணவிக்கு தெரிந்தவர் என்று கூறப்படுகிறது. அதன் மூலம் அவரையும் பிடித்து விசாரிப்பதுடன், அவருடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

The post நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் அதிகாரி மகளிடம் சில்மிஷம் appeared first on Dinakaran.

Tags : Chilmisham ,Nagercoil ,Therisanangoppu ,Kanyakumari district ,
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் பாதிரியார் கைது