சென்னை: கர்நாடக தேர்தலுக்காக ஹெலிகாப்டரில் பண மூட்டைகளை அண்ணாமலை கொண்டுவந்தார் என காங். வேட்பாளர் வினய்குமார் புகார் தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணம் விநியோகிப்பதாக காவுப் தொகுதி காங்.வேட்பாளர் வினய்குமார் சொரகே புகார் கூறினார். வினய்குமார் சொரகே விரக்தியின் உச்சத்தில் இருப்பதால் இவ்வாறு விமர்சிக்கிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.
The post கர்நாடக தேர்தலுக்காக ஹெலிகாப்டரில் பண மூட்டைகளை கொண்டுவந்தார் அண்ணாமலை: காங். வேட்பாளர் வினய்குமார் புகார் appeared first on Dinakaran.