×

பஞ்.,அலுவலகம் அருகே 8 நாட்டு துப்பாக்கிகள் வீச்சு

சேந்தமங்கலம், ஏப்.18: கொல்லிமலையில் உள்ள 14 ஊராட்சிகளில், 330க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை வனப்பகுதியில் வேட்டையாட பயன்படுத்தி வருகின்றனர். வாழவந்திநாடு போலீசார் அடிக்கடி ரோந்து சென்று, வேட்டையாடி வந்தவர்களை கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாழவந்திநாடு, செங்கரை காவல் நிலையங்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊர் தர்மகர்த்தா ஆகியோரை அழைத்து அந்தந்த பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் வழக்கு இல்லாமல், கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், கடந்த சில மாதங்களாக கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், ஊர் ஒதுக்குப்புறங்களில் துப்பாக்கிகளை போட்டு விட்டு சென்றனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், வளப்பூர்நாடு ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம், நேற்று மாலை கேட்பாரற்று 8 துப்பாக்கிகள் கிடந்தது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள் வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக எஸ்ஐ தியாகராஜன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The post பஞ்.,அலுவலகம் அருகே 8 நாட்டு துப்பாக்கிகள் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Panj ,Senthamangalam ,Kollimalai ,Dinakaran ,
× RELATED காதலியின் கணவனை கொன்ற அதிமுக பஞ்.தலைவர்