×

சேதமடைந்த அங்கனூர் பாலம் சுவரை சீரமைக்க வேண்டும்

குன்னம், ஏப்.18:சேதமடைந்த அங்கனூர் பாலம் சுவரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்திற்கும், அங்கனூர் கிராமத்திற்கும் இடையே ஓடும் சின்னாற்றில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. சின்னாற்றில் தரை பாலமாக இருந்தபோது அடிக்கடி வரும் வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டி பொதுமக்கள் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் சில மாதங்களாக இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்து பள்ளம் தெரிகிறது. இதனால் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் செல்பவர்கள் இரவு நேரங்களில் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை உடனடியாக இந்த பாலத்தின் சேதமடைந்த பகுதிகளை சரி செய்து தர வேண்டுகின்றனர்

The post சேதமடைந்த அங்கனூர் பாலம் சுவரை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Anganur ,Gunnam ,Vasishthapuram ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விறு விறுப்பான வாக்குப்பதிவு