பல்லடம்,ஏப்.18: பல்லடம் அருகேயுள்ள பொங்கலுர் ஊராட்சி ஒன்றியம் மாதப்பூர் சமத்துவபுரத்தில் ரூ.43 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனை ஒன்றிய குழுத்தலைவர் வக்கீல் குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் லோகுபிரசாத், பொங்கலூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மாதப்பூர் சமத்துவபுரம் புனரமைப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.