போடி, ஏப். 18: போடி டி.வி.கேகே நகர் 2 வது தெருவில் குடியிருப்பவர் பவித்ரா (23). இவர் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் கார்த்திக் (23) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக்கிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்துள்ளார். திடீரென நேற்று முன் தினம் இரவு மனைவி கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.