விருதுநகர், ஏப்.18: விருதுநகர் அருகே கண்மாய் பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகே செங்கோட்டை கிராம கண்மாய் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஆமத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ கோபு தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நபர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார்.
போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் செங்கோட்டையை சேர்ந்த மாரீஸ்வரன்(40) என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
The post கஞ்சா விற்ற நபர் கைது appeared first on Dinakaran.
