×

விளையாட்டு மைதானம் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: விளையாட்டு மைதானம் கேட்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தை இளைஞர்கள் நேற்று முற்றுகையிட்டனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி இளைஞர்கள் விளையாட்டுகளில் தங்களை மேம்படுத்திக் கொள்ள சூராத்தம்மன் கோயிலுக்கு அருகில் இருந்த நிலத்தை பயன்படுத்தினர். அதில் கைப்பந்து, கால்பந்து மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடினர். ஆனால், அந்த நிலம் சூரத்தம்மன் கோயில் பெயரில் பட்டாவாகி விட்டதாக கூறப்படுகிறது. அதில் தற்போது மரங்கள் நடும் பணி நடக்கிறது. இதனால், விளையாட இடம் இல்லாமல் இளைஞர்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களது ஊராட்சியில் உள்ள பொது இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விளையாட்டு மைதானத்திற்கென்று இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று இளைஞர்கள் பல ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தொடர் கோரிக்கை வைத்தும் செவி சாய்க்கவில்லை. குன்னத்தூர், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று ஊராட்சி மன்ற தலைவரை ஊராட்சி அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகிலிருந்து கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டவாறு ஊர்வலம் வந்தனர்.

அப்போது, ஊராட்சி மன்ற அலுவலகம் மூடிக்கிடந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சற்றுச்நேரம் கழித்து ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மற்றும் துணை தலைவர் ரமேஷ் ஆகியோரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றபின் விளையாட்டு மைதானத்திற்கு இடம் ஒதுக்கி தரப்படும் என்று உறுதியளித்தனர். எனவே இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post விளையாட்டு மைதானம் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Navaradhakuvakkukuram ,CITRUKUKUKUKUKUKUKUKUKUARI ,Pravadhakudraksha ,Kunnathur ,Pravadhi Youth Union Kunnathur ,Pavement Forum ,Dinakaran ,
× RELATED காங். வேட்பாளர் சர்மா உருக்கம்: காந்தி...