×

வாக்காளர்களுக்கு வினியோகிக்க கர்நாடகாவுக்கு ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வந்த அண்ணாமலை: காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

மங்களூரு: தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவுக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய போது பெரிய பையில் பணத்தை கொண்டு வந்தார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் வினய் குமார் சொரகே குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு காங்கிரஸ், பாஜ, மஜதவினர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.20ம் தேதி கடைசி தேதியாகும். பாஜ மீதான அதிருப்தியில் அக்கட்சி தலைவர்கள் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய பாஜ முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மங்களூரு மூத்த காங்கிரஸ் தலைவரும் கவுப் தொகுதி வேட்பாளருமான வினய் குமார் சொரகே கூறுகையில், ‘தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போது அவருடன் பெரிய பை கொண்டு வரப்பட்டது. அந்த பை நிறைய பணம் உள்ளது. காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளோம். கடந்த முறை பாஜ கடலோர மாவட்டங்களில் பொய் பிரசாரம் செய்து வெற்றி பெற்றுவிட்டது. இந்த முறை அவர்களது பிரசாரம் எடுபடாது’ என்றார். பேட்டியின் போது உடுப்பி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காஞ்சன் உடனிருந்தார்.

The post வாக்காளர்களுக்கு வினியோகிக்க கர்நாடகாவுக்கு ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வந்த அண்ணாமலை: காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Annamalai ,Karnataka ,Mangaluru ,Tamil ,Nadu ,BJP ,president ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...