பிரான்சில் நடந்த மார்டி கார்லோ ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனியுடன் (19 வயது, 7வது ரேங்க்) மோதிய ருப்லேவ் (25 வயது, 6வது ரேங்க்) 5-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் அதிரடியாக விளையாடி ஹோல்கரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த ருப்லேவ் 6-2 என வென்று சமநிலை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட்டில் அனல் பறந்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ருப்லேவ் 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி, 34 நிமிடம் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது அவர் வென்ற முதல் ‘ஏடிபி மாஸ்டர்ஸ் 1000’ அந்தஸ்து பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மான்டி கார்லோ டென்னிஸ் ருப்லேவ் சாம்பியன் appeared first on Dinakaran.