×

பஸ் –லாரி நேருக்கு நேர் மோதி விபத்து தனியார் கம்பெனி ஊழியர்கள் படுகாயம்

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் அருகே தனியார் கம்பெரி பஸ் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், தனியார் கம்பெனி ஊழியர்கள் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், பரனூர் பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏற்றுக்கொண்டு, நேற்று செங்கல்பட்டு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து சங்கராபுரம் அருகே சென்றபோது, காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தனியார் கம்பெனி பேருந்தின் முன் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், தனியார் பேருந்து ஓட்டுநர் வெங்கடேசன் (20), ஊழியர்கள் கார்த்திக் (28), சித்ரா (36), மெய்தின் (29), பாஸ்கரன் (27), ரோஜா (23) மற்றும் லாரி ஓட்டுநர் அருள்ஜோதி (35) உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பஸ் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து தனியார் கம்பெனி ஊழியர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Lorry ,Utramerur ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...