×

மாணவர்கள் உயிரிழப்பை தடுக்க நீர்நிலைகளில் பாதுகாப்பை அரசு அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: மாணவர்களின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் அனைத்து நீர் நிலைகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தமிழகத்தில் சில நாட்களாகவே நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணமும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாணவர்கள் உயிரிழப்பை தடுக்க நீர்நிலைகளில் பாதுகாப்பை அரசு அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Vijayakanth ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம்...