×

மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை கொன்ற தொழிலாளி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துகுமார்(30). பெயிண்டர். இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராசாத்தி(38). இவருக்கும், முத்துகுமாருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை ராசாத்தியின் மூத்த மகன் வெற்றிவேல் என்பவர் நேரடியாக பார்த்து உள்ளார். இதனால் அவமானம் தாங்க முடியாமல் கடந்த 14ம் தேதி வெற்றிவேல் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

மகன் இறந்த சோகம் மற்றும் கோபத்தில் இருந்த தந்தை முருகேசன், இளைய மகன் மற்றும் அவரது உறவினர்கள், சண்முகம், பாலாமணி(40), ராசாத்தி, அன்னபூரணி(33), நாகராஜ் ஆகியோர் முத்துக்குமார் வீட்டிற்கு நேற்று மாலை 5 மணிக்கு சென்றனர். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சண்முகம் மற்றும் உடன் சென்றவர்கள் முத்துக்குமாரை கத்தி, குத்துவிளக்கு, அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் போலீசார் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முத்துகுமார் மனைவி ரோஜா அளித்த புகாரின்பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராசாத்தி, பாலாமணி, அன்னபூரணி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சண்முகம், முருகேசன், நாகராஜ் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

The post மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை கொன்ற தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Muthukumar ,Anvasal Madu Street, Pudukkotta District ,Murugesan ,Navampati ,Ilapur ,Dinakaran ,
× RELATED கடன் தொல்லையால் விபரீத முடிவு...