அம்பை: விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த புகாரில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், இந்த புகார்களை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்குதல், சித்தரவதை செய்தல் ஆகிய குற்றங்களுக்கான ஐ.பி.சி 326 பிரிவின் கீழ் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த புகாரில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.