×

பொருளாதாரத்துக்கான நோபல் 3 பேருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 நிபுணர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படும் இந்த விருதை இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவ துறை சாதனையாளர்கள் இதுவரை பெற்றுள்ளனர். இந்நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்புக்காக நிபுணர்கள் டேவிட் கார்டு, ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கியூடோ இம்பென்ஸ்’ ஆகியோருக்கு இப்பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post பொருளாதாரத்துக்கான நோபல் 3 பேருக்கு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Stockholm ,
× RELATED ஜப்பானில் செர்ரி மலர்கள் திருவிழா..குவியும் மக்கள்..!!