×

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த தவறிவிட்டதாக கலாஷேத்ரா மீது மாணவிகள் 7 பேர் வழக்கு தொடர்ந்தனர். மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் விசாரணை குழுவை மாற்றியமைக்க வேண்டும். விசாரணை குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெற கூடாது என மனுவில் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவிகள் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு, கலாஷேத்ரா பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Qalashethra ,Chennai ,Khalashethra ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...