×

கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

வத்திராயிருப்பு, ஏப். 17:வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் இருந்து செல்லும் சாலையில் அமைந்துள்ள ஆலமரம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூமாபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு எஸ்.ஐ சரவணகுமார் தலைமையில் போலீசார் விரைந்தனர். அப்போது கூமாபட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் (32) பாலாஜி (25), புதுப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தனர். விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பனைக்காக காத்திருப்பது உறுதியானது. அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

The post கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vathirayirupu ,Koomapatti ,Vathirairipu, Koomapatti ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு