×

இலங்கை அபார ரன் குவிப்பு

காலே: அயர்லாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்ரு தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. நிஷான் மதுஷ்கா 29 ரன்னில் வெளியேற, கேப்டன் திமத் கருணரத்னே – குசால் மெண்டிஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 281 ரன் சேர்த்து அசத்தியது. குசால் 140 ரன் (193 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்), மேத்யூஸ் 0, கருணரத்னே 179 ரன் எடுத்து (235 பந்து, 15 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர். முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்துள்ளது. சண்டிமால் 18, பிரபாத் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post இலங்கை அபார ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ireland ,Sri ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்