×

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது

திருவள்ளூர், ஏப். 17: திருவள்ளூர் அடுத்த பட்டரை பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக மணவாளநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் மணவாளநகர் நோக்கி வந்த இளைஞரை மடக்கி சோதனை செய்தனர். அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர் மணவாளநகர் கபிலர்நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்கிற சீனு என்பதும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட நவீன் என்கிற சீனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Manavalanagar police ,Bhattarai ,Tiruvallur ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்