×

திருவேற்காட்டில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்

பூந்தமல்லி, ஏப். 17: திருவேற்காட்டில், திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆங்காங்கே இலவச நீர்மோர் பந்தல்கள் திறந்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திமுகவினர் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தணிக்க வேண்டும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக திமுகவினர் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவேற்காடு நகர திமுக சார்பில், கோலடி பகுதியில் நேற்று நேர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் நகர் மன்ற தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பவுல், நகர இளைஞரணி செயலாளர் சங்கர் நிர்வாகிகள் ராஜி, சுதாகர், துரை கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர பொருளாளர் சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர், மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளை வழங்கினார். இதையடுத்து பொதுமக்களுக்கு அறுசுவை உணவினை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆவடி: ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பட்டாபிராம் சாஸ்திரி நகர் பகுதியில் கு.சேகர் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இளநீர், மோர், வெள்ளரிப்பிஞ்சி, தர்ப்பூசணி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். மேலும் பேருந்தில் சென்ற பயணிகள், சாலையில் செல்வோரை அழைத்து உணவு பொருட்களை வழங்கியதை பொதுமக்கள் பெற்று கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன்பிரகாஷ், பகுதி செயலாளர் பொன் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருவேற்காட்டில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Neer ,Mor Pandal ,DMK ,Tiruvekkad ,Minister ,Nasser ,Poontamalli ,S.M. Nasar ,Neer Mor Pandal ,Tiruvekkat ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் தாகத்தை தீர்க்க...