×

பெண்ணிடம் நகை பறிப்பு

சென்னை: திருநின்றவூர், தாசர்புரம், முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வனஜா (60). இவர், தங்கை நிர்மலா என்பவருடன், அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருவரும் நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், வனஜா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறிக்க முயன்றனர். உடனே அவர் செயினை பிடித்துக்கொண்டதால், கையில் கிடைத்த 2 சவரனை அறுத்துக் கொண்டு மர்ம நர்கள் தப்பினர். இதுகுறித்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் வனஜா புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பெண்ணிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vanaja ,First Main Road, ,Thasarpuram, Tiruninavur ,Nirmala ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...