×

எஸ்ஐ தற்கொலை

சென்னை: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் வசித்து வந்தவர் தணிகைவேல். (49) இவர், திருவள்ளூர் உட்கோட்ட நெடுஞ்சாலை ரோந்து பணி சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி கீதா மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அவரது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ேபாலீசார் விசாரிக்கின்றனர்.

The post எஸ்ஐ தற்கொலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Thanikaivel ,Kakaloor ,Thiruvallur ,Tiruvallur ,Utkota Highway Patrol ,Dinakaran ,
× RELATED மாணவர்கள், நோயாளிகள் நலன் கருதி ரயில்...