×

மாப்பிள்ளையூரணியில் திமுக தண்ணீர் பந்தல்

தூத்துக்குடி, ஏப்.16:மாப்பிள்ளையூரணியில் திமுக தண்ணீர் பந்தலை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் ஜோதிபாஸ் நகர், தாளமுத்துநகர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளரும், பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்பி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சண்முகையா எம்எல்ஏ, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், அவைத்தலைவர் அருணாச்சலம்,

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தொண்டரணி வீரபாகு, ஆறுமுகம், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ஆரோக்கியமேரி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், தர்மலிங்கம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஒன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் பிளோமின்ராஜ், ஊராட்சி உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், சக்திவேல், ஜேசுராஜா, கிளைச்செயலாளர் காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post மாப்பிள்ளையூரணியில் திமுக தண்ணீர் பந்தல் appeared first on Dinakaran.

Tags : DMK ,water pandal ,Mappillayurani ,Thoothukudi ,Kanimozhi ,Thoothukudi East Union DMK ,pandal ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு