×

ஓட்டல் மேலாளருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை, ஏப். 16: நெல்லை சந்திப்பில் ஓட்டல் மேலாளரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது நெல்லை புரத்திலுள்ள ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் சங்கர்நகரில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு தச்சநல்லூர் ஊருடையார்புரம் வழியாக சென்றார். அப்போது இரு பைக்குகளில் வந்த 4பேர் கும்பல் ரமேஷை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

The post ஓட்டல் மேலாளருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Scythe ,Paddy, ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்