×

திண்டுக்கல்லில் கோடை கால நீர்மோர் பந்தல்: பழநி எம்எல்ஏ திறந்து வைத்தார்

திண்டுக்கல் ஏப். 16: திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே திமுக ஒன்றிய கழகம் சார்பில் கோடைகால நீர்மோர் பந்தலை திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழநி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் திறந்து வைத்தார். திண்டுக்கல் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அஞ்சலி ரவுண்டானா அருகில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை தலைமை தாங்கினார். இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர், திராட்சை, வெள்ளரி, மற்றும் பழங்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், இந்த நீர்மோர் பந்தலானது கோடை காலங்கள் முடியும் வரை பொதுமக்களின் கோடை வெயிலின் தாகத்தை தனித்து கொள்ளவும் உஷ்ணங்களை தணிக்கவும் இந்த ஏற்பாடானது மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் திறக்கப்பட உள்ளதாகவும் தற்பொழுது 10 இடங்களில் நீர்மோர் பந்தல் ஆனது திறக்கப்பட்டுள்ளது என்றார். இதில் மாவட்ட அவை தலைவர் காமாட்சி,துணைச் செயலாளர் பிலால் உசேன்,வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்,ஒன்றிய குழு தலைவர் ராஜா,ஊராட்சி செயலாளர் கணேசன்,ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் செந்தில்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரூபன் உள்பட மகளிர் அணி, சார்பு அணி மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப.பெருமாள் சாமி நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் கோடை கால நீர்மோர் பந்தல்: பழநி எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Dindigul Summer Neemor Pandal ,Palani MLA ,Dindigul ,DMK ,water buffalo ,Dindigul Anjali Roundabout ,Summer water buffalo ,Palani ,MLA ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...