விருதுநகர், ஏப். 16: விருதுநகரில் தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்துத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது. விருதுநகரில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராஜாமணி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவர் தமிழ்செல்வன் துவக்கவுரையாற்றினார். சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
The post மாநில அளவிலான பயிலரங்கம் appeared first on Dinakaran.