×

கல்லூரி மாணவி மாயம்

தர்மபுரி, ஏப்.16:கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகள் பிரவீனா(19). இவர் காரிமங்கலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்கி, 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையையொட்டி, கடந்த 2 நாட்களுக்கு முன் விடுதியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுச்சென்றார். ஆனால் வீட்டிற்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், இதுபற்றிய புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Dharmapuri ,Mathayan ,Pokanapalli village ,Krishnagiri ,Praveena ,Karimangalam ,
× RELATED ஜி.ஹெச்சில் சிகிச்சை பெற்ற தொழிலாளி மாயம்