×

பிளஸ்-2 மாணவரை கடத்தி சென்ற இளம்பெண் போக்சோவில் கைது

வெள்ளகோவில்: திருப்பூர் அருகே ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவரை கடத்தி சென்ற இளம்பெண் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் திடீரென மாயமானார். இதனையடுத்து, அவர்களது பெற்றோர் அக்கம், பக்கத்தினர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் அவரை தேடினர். ஆனால், மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்த 24 வயது இளம்பெண், மாணவரிடம் ஆசைவார்த்தை கூறி அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மாணவரை மீட்ட போலீசார் அவரை கடத்தி சென்ற இளம்பெண்ணை போக்சோவில் கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவரை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பிளஸ்-2 மாணவரை கடத்தி சென்ற இளம்பெண் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Bokso ,Vellakoil ,Tirupur ,Bocso ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது