×

மொகுல் சோக்‌ஷியை இந்தியாவுக்கு கொண்டு வர தடை

ஆன்டிகுவா: பிரபல வைர வியாபாரி மொகுல் சோக்சியை இந்தியாவுக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பினார். அவரை இந்தியா கொண்டுவர முற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான வழக்கு ஆன்டிகுவா அண்ட் பார்டிடா நாட்டில் உள்ள ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் மெகுல் சோக்சியை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடியாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மெகுல் சோக்சிக்கு இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளது.

The post மொகுல் சோக்‌ஷியை இந்தியாவுக்கு கொண்டு வர தடை appeared first on Dinakaran.

Tags : Mogul Chokshi ,India ,Antigua ,Choksi ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!