×

மகாராஷ்டிராவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகானில் இருந்து ‘பாஜி பிரபு வடக் குழு’வைச் சேர்ந்த 42 பேர் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தனியார் பஸ்சில் சென்றனர். விழா முடிந்ததும் திரும்பிய போது மும்பை- புனே நெடுஞ்சாலையில் ராய்காட் மாவட்டத்தில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 5 சிறுவா்கள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post மகாராஷ்டிராவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Mumbai ,Baji Prabhu North Group ,Goregaon, Maharashtra ,Pune ,
× RELATED சிவசேனா முதல்பட்டியல் உத்தவ் இன்று ரிலீஸ்