×

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் சென்னையிலிருந்து 46 பேர் பயணம் ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார்

சென்னை: சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு சென்னையிலிருந்து புறப்படும் ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா இடையேயான தொடர்பை இன்றைய தலைமுறைக்கு எடுத்து கூறும் வகையில் நாளை முதல் வரும் 26ம் தேதி வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிகாக மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவல் நகருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு ரயில் மதுரையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயில் நாளை காலை 7.30 மணிக்கு விராவல் ரயில் நிலையம் செல்லும்.

The post சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் சென்னையிலிருந்து 46 பேர் பயணம் ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Saurashtra Tamil Sangamam ,Governor Ravi ,Chennai ,Governor RN Ravi ,Saurashtra Tamil Sangam ,Gujarat ,Tamil Nadu ,Governor ,Ravi ,Saurashtra ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...