லக்னோ: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. லக்னோ தொடக்க வீரர்களாக ராகுல், மேயர்ஸ் களமிறங்கினர். மேயர்ஸ் 29 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹூடா 2, க்ருணால் 18, நிகோலஸ் பூரன் 0, ஸ்டாய்னிஸ் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ராகுல் அரை சதம் அடித்தார்.
அவர் 74 ரன் (56 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அவுட்டானார். லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. பஞ்சாப் பந்துவீச்சில் கரன் 3, ரபாடா 2, அர்ஷ்தீப், ஹர்பிரீத், சிக்கந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் 19.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 57 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். கடைசியில் ஷாருக்கான் 23 ரன் (10 பந்து 1பவுண்டரி, 2 சிக்சர்)ரபாடா கடைசி வரை ரன் எடுக்காமல் இருந்தார். லக்னோ பந்துவீச்சில் 19.3 ஓவரில் விக்கெட், 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பஞ்சாப் கிங்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.
The post லக்னோவை வீழ்த்தியது பஞ்சாப் appeared first on Dinakaran.