×

103 பேர் குண்டாசில் கைது

சென்னை: சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 62 பேர், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 26 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 8 பேர், மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 2 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 நபர், பாலியல் தொழில் நடத்திய 3 பேர் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 நபர் என மொத்தம் 103 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post 103 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Kundazi ,CHENNAI ,Kundasil ,
× RELATED குண்டாசில் இருவர் கைது