×

பூச்சாண்டி காட்டும் அண்ணாமலையின் முயற்சிகள் பலிக்காது: ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை: அதிமுக தலைவர்களின் சொத்து பட்டியலும் வெளியிடப்படும் என கூறிய அண்ணாமலைக்கு அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் திமுகவினரின் சொத்து பட்டியல் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார்.

அதில் பல்வேறு திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு என்று கூறி இருந்தது. அப்போது அண்ணாமலை, பேசியதாவது முறைகேடு பட்டியல் ஒன்றுடன் முடிவடையாது. தமிழ்நாடு அரசில் இதுவரை எந்த கட்சி எல்லாம் அமைந்து இருக்கிறதோ. ஒரு கட்சிக்கு மட்டுமல்ல அத்தனை கட்சிகளின் ஊழல்களும் 2024 தேர்தலுக்கு முன்பு கொண்டுவரப் போகிறேன் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஊழலை எதிர்க்கிறோம் என்றால் மொத்தமாகத்தான் எதிர்க்கவேண்டும். பாதியை மட்டும் எதிர்க்கக்கூடாது. ஊழல் செய்பவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்போம். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் பேசியிருந்தார். அண்ணாமலை அதிமுக ஊழல் பட்டியலை வெளியிட போவதாக மறைமுகமாக குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார் இது தொடர்பாக பேசியதாவது மறைமுகமாக பூச்சாண்டி காட்டும் அண்ணாமலையின் முயற்சிகள் அதிமுகவிட பலிக்காது என்று கூறிய ஜெயக்குமார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையை ஏற்றால் மட்டுமே தங்கள் கூட்டணியில் பாஜக தொடரமுடியும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

The post பூச்சாண்டி காட்டும் அண்ணாமலையின் முயற்சிகள் பலிக்காது: ஜெயக்குமார் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Annamalayas ,Jayakumar ,Chennai ,Jayakkumar ,Anamalai government ,Anamalai ,Anamalayan ,Dinakaran ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...