×

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Inspection Centre ,Chennai ,Puduva ,Karaikal ,Chennai Meteorological Survey Centre ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...