×

திருமணமான 3 நாளில் தம்பதி நீரில் முழ்கி பலி

ஆறுமுகநேரி: திருமணமான 3வது நாளில் புதுமண தம்பதி நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு, நேசமணி நகரில் வசித்து வருபவர் ராமையா. இவரது மகள் முத்துமாரி (21). கடந்த 10ம் தேதி இவருக்கும் மேலாத்தூரை சேர்ந்த மாணிக்கராஜ் மகன் பழனிக்குமார் (30) என்பவருக்கும் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் தம்பதியினர் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோயிலில் சுவாமி கும்பிட்டு விட்டு வருவதாக சென்றுள்ளனர். கோயிலுக்கு சென்றவர்கள் வெகுநேரம் வரை வீடு திரும்பாததால் பழனிக்குமார் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து இருவரையும் தேடி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மேலாத்தூர் குடிநீர் தேக்க தொட்டி அருகே உள்ள குளத்தில் பழனிக்குமாரின் செருப்பு கிடந்துள்ளது. அங்கு சென்று உறவினர்கள் பார்த்தபோது நீரில் முழ்கியவாறு பழனிக்குமார் மற்றும் முத்துமாரி ஆகியோரின் உடல்கள் மிதந்துள்ளன. இதனை பார்த்து இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் முடிந்த மூன்று நாட்களில் மணமக்கள் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் இருவீட்டாரும் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இச்சம்பவத்தால் மேலாத்தூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post திருமணமான 3 நாளில் தம்பதி நீரில் முழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Arumukaneri ,Mullakkad, Neshamani Nagar, Thoothukudi district ,Dinakaran ,
× RELATED ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில்...