மாட்ரிட்: பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் ரபேல் நடால் அறிவித்துள்ளார். ஸ்பெயினில் நடைபெறும் பிரபல ஏடிபி டென்னிஸ் தொடரான பார்சிலோனா ஓபன், நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க இருந்த உள்ளூர் நட்சத்திரம் ரபேல் நடால், முழு உடல்தகுதி இல்லாததால் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின்போது இடுப்பு பகுதியில் காயம் அடைந்த நடால், அதன் பிறகு போட்டிகளில் பங்கேற்காமல் நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார்.
ஏற்கனவே இண்டியன் வெல்ஸ், மயாமி ஓபன், மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் தொடர்களில் விளையாடாத அவர், தற்போது பார்சிலோனா ஓபனில் இருந்தும் விலகியுள்ளது டென்னிஸ் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இது வரை 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரெஞ்ச் ஓபன் தொடரில் 15வது முறையாக பட்டம் வென்று சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The post விலகினார் நடால் appeared first on Dinakaran.