×

அமெரிக்காவில் கொட்டகை தீ விபத்தில் 18 ஆயிரம் பசுக்கள் தீயில் கருகி பலி

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் அடுத்த சவுத்ஃபோர்க் டெய்ரி ஃபார்ம்ஸில் கால்நடைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்தப் பால் பண்ணையின் கொட்டகையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த 18,000க்கும் மேற்பட்ட பசுக்கள் தீயில் கருகி இறந்தன. அமெரிக்காவில் இதுவரை இதுபோன்ற கொட்டகை தீ விபத்து ஏற்பட்டதில்லை என்கின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காஸ்ட்ரோ கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்:
கால்நடை பண்ணையின் கொட்டகையின் ஒரு கட்டிடத்தின் வழியாக ஏற்பட்ட தீ விபத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் கருகி பலியாகினர. பொது சுகாதாரம் மற்றும் பண்ணையின் பாதுகாப்பிற்காக பண்ணைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் கொட்டகை தீ விபத்தில் 18 ஆயிரம் பசுக்கள் தீயில் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : United States ,Texas ,Livestock Farm ,Southfork Dairy Farms ,Texas, USA ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!