×

ஏ.டி.எஸ்.பி. டிரான்ஸ்பர்

ஈரோடு,ஏப்.14: ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கை தடுப்பு பிரிவு ஏ.டிஎஸ்.பி.யாக கனகேஸ்வரி பணியாற்றி வந்தார். இவரை நாமக்கல் மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி.யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை தமிழ்நாடு டி.ஜி.பி. சைலாந்திரபாபு பிறப்பித்துள்ளார். ஆனால், இவரது ஏடிஎஸ்பி கனகேஸ்வரிக்கு மாற்றாக வேறு யாரையும் நியமிக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏற்கனவே சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றிய ஜானகிராமன், எஸ்பி.யாக பதவி உயர்வு சென்று விட்டார். இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று ஏ.டி.எஸ்.பி. பணியிடங்களில், 2 பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஏ.டி.எஸ்.பி. டிரான்ஸ்பர் appeared first on Dinakaran.

Tags : Erode ,Kanakeswari ,Anti-Criminal Action Unit ,ATSP ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...