×

விடுதியில் தங்கி படிக்க பிடிக்காததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

தேனி, ஏப். 14: தேனி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது மகள் பிருந்தா ஸ்ரீ (13). இவர், கடமலைக்குண்டுவில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கி பயில மனமில்லாமல் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வாழையாத்துப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்த சிறுமியை மீண்டும் பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தினர்.

நேற்று முன்தினம் காலை வீட்டின் கழிப்பறைக்கு சென்ற சிறுமி, நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் கழிப்பறையை திறந்து பார்த்தார். அப்போது பாத்ரூமில் சிறுமி பிருந்தா ஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காட்டுராஜா பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post விடுதியில் தங்கி படிக்க பிடிக்காததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Theni ,Katturaja ,Vazaiyathupatti ,Brinda Sri ,Kadamalaikundu ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு