×

கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் தனியார் வாகனங்களுக்கு உரிமம் பெற உத்தரவு

மானாமதுரை, ஏப்.14: மானாமதுரை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மலக்கசடு, கழிவு மேலாண்மை கொள்கையின் படி, உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை மேம்படுத்த கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தல், மலக்கசடு, கழிவு நீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள், டிரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி கழிவுநீரை அகற்றும் வாகனங்கள் நகராட்சி உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பித்த 30 நாள்களுக்குள், 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் வழங்கப்படும், இதற்கான கட்டணம் ரூ. 2 ஆயிரம். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும் கழிவு நீர்த் தொட்டிகள் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற்று இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயங்குவது கண்டறியப்பட்டால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், நீதிமன்றம் மூலமும் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் தனியார் வாகனங்களுக்கு உரிமம் பெற உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Municipal Commissioner ,Kannan ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...