×

காரைக்குடி அருகே தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது: 45 டூவீலர்கள் பறிமுதல்

காரைக்குடி, ஏப்.14: காரைக்குடி அருகே சாக்கோட்டை பகுதியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரைக்குடி அருகே சாக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டூவீலர்கள் தொடர்ந்து காணாமல் போவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் புகார் அளித்து வந்தனர். இது தொடர்பாக எஸ்.பி செல்வராஜ் உத்தரவின்படி, ஏஎஸ்பி ஸ்டாலின் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த புதுக்கோட்டை மாவட்ட கீரமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணன் (40), கணேசன் (40), விஜய் (29), மாரிமுத்து (40), சுந்தர் (29) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் இவர்கள் 5 பேரும் காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 45 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரைக்குடி அருகே தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது: 45 டூவீலர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Chakkottai ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அருகே சாக்கோட்டையில்...