×

தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து விஐடியில் புதிய பி.காம் படிப்புகள் அறிமுகம்: புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி வேந்தர் பங்கேற்பு

வேலூர்: தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து விஐடியில் புதிய பி.காம் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விஐடி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பங்குச் சந்தையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி நிதிச் சந்தை மற்றும் எதிர்கால திறன் தேவைக்கேற்ப விஐடி தேசிய பங்குச்சந்தையுடன் இணைந்து விஐடியில் உள்ள வணிகவியல் துறையுடன் 2 புதிய பி.காம் படிப்புகளை (வங்கி மற்றும் மூலதன சந்தை, நிதி தொழில்நுட்பம்) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் படிப்பில் வங்கி மற்றும் நிதித்துறை சம்பந்தமான தொழில் துறைக்கு தேவையான திறன்களை மேம்படுத்தும் விதத்தில் விஐடி பேராசிரியர்கள் மற்றும் தேசிய பங்குச்சந்தை அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

மேலும் புதிய பி.காம் படிப்புகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய லேப் தேசிய பங்குச்சந்தையின் என்எஸ் மார்ட்டுடன் இணைந்து விஐடி உருவாக்கி உள்ளது. நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, தேசிய பங்குச்சந்தை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அபிலாஷ் மிஸ்ரா, தேசிய பங்குச்சந்தை நிர்வாகிகள் ரங்கநாதன், வினோத் ஜேம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த இரண்டு புதிய பி.காம் படிப்புகளால் வங்கி மற்றும் நிதி துறையில் சுமார் 1.8 மில்லியன் வேலைவாய்ப்புகளை பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து விஐடியில் புதிய பி.காம் படிப்புகள் அறிமுகம்: புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி வேந்தர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : VIT ,NSE ,MoU ,Vellore ,National Stock Exchange ,VIT University ,Dinakaran ,
× RELATED செக் குடியரசில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி