×

குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 ரவுடிகள் குண்டாசில் கைது

காஞ்சிபுரம்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 ரவுடிகளை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குண்டாசில் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்க உட்பட்ட, குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட விப்பேடு கிராமத்தை சேர்ந்த ரவி மகன் விக்னேஷ் (எ) விக்கி (22), செவிலிமேடு வெங்கடேஷ் மகன் மணிகண்டன் (எ) ஊமை (22) மற்றும் வளர்புரம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் சிவகுமார் (எ) ஊக்கு ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் பரிந்துரை செய்தார்.அதன் அடிப்படையில் கலெக்டர் ஆர்த்தி, 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார், நேற்று குற்றவாளிகளான விக்னேஷ், மணிகண்டன், சிவகுமார் ஆகியோரை குண்டாசில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 ரவுடிகள் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Kundazi ,Kanchipuram ,All Women Police Station ,Gundasil ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை