×

விசூர், தண்டரை, சித்தன்னக்காவூர் ஊராட்சிகளுக்கு செய்யாறு, பாலாற்று குடிநீரை வழங்க வேண்டும்: உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் வலியுறுத்தல்

மதுராந்தகம்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள விசூர், தண்டரை, சித்தன்னக்காவூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செய்யாறு மற்றும் பாலாற்று குடிநீரை வழங்க வேண்டும் என சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று முன்தினம் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் வலியுறுத்தினார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் பேசியதாவது: உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் விசூர், தண்டரை போன்ற ஊராட்சிகள் செய்யாற்றில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகவே, செய்யாறு குடிநீர் வேண்டுமென கோரிக்கையும், அதேபோன்று பாலாற்றில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அண்ணாத்தூர், தண்டரை, சித்தன்னக்காவூர் கிராமங்களுக்கு பாலாற்று குடிநீர் வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் செயல்படுத்துவாரா என அறிய விரும்புகிறேன்’ என்றார். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து பேசுகையில், ‘செயலாக்கத்தில் உள்ள குடிநீர் திட்டங்கள், ஆறுகள் அதனருகில் இருந்தால் கூட அதிலிருந்து எடுத்து கொடுப்பது இயலாத காரியம். அதை ஆராயவேண்டும். அவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்ணீர் அதிகமாக இருந்தால், அவர்களுக்கு பிரித்துக்கொடுக்கலாம். இல்லையென்றால், கொடுப்பதில் சிரமம். உறுப்பினர் சொல்வதை கவனத்தில் கொள்கிறேன். உடனடியாக குடிநீர் வாரிய அதிகாரிகளை அழைத்து என்ன செய்யலாம் என ஆராய்ந்து கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்’ என்றார்.

The post விசூர், தண்டரை, சித்தன்னக்காவூர் ஊராட்சிகளுக்கு செய்யாறு, பாலாற்று குடிநீரை வழங்க வேண்டும்: உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Visoor ,Thandarai ,Chittanakkavur ,Uttaramerur ,MLA ,Sundar ,Madhurandakam ,Chitthannakavoor ,
× RELATED செங்கல்பட்டில் பிக்பாக்கெட் திருடன் கைது