×

சைக்கோ எனக்கூறி காதலை முறித்த இளம்பெண்: நியாயம் கேட்டு ரகளை செய்த இன்ஜினியர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெபின் (27). மெக்கானிக்கல் இன்ஜினியர். அவரும் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கல்லூரி படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். 8 ஆண்டுகளாக அவர்களது காதல் தொடர்ந்தது. அதன்படி கல்லூரிக்கு செல்லும்போது 2 பேரும் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்ததோடு ஷாப்பிங், டேட்டிங் என்று பல்வேறு ஊர்களுக்கும் சென்று வந்து உள்ளனர்.ஜெபின் தனது காதலிக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக வாங்கி கொடுத்து உள்ளார். ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் கேரளா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கும் அளவுக்கு எல்லை மீறியது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெபின் வேலைக்காக வெளிநாடு (பெகரின்) சென்ற நிலையில் இளம்பெண்ணும் தக்கலையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இருப்பினும் 2 பேரும் இரவு நேரங்களில் வீடியோ காலில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் இளம்பெண் தனது சக நண்பர்களுடன் ஊர்சுற்ற ஆரம்பித்து உள்ளார். இதை அறிந்த ஜெபின் அவரை கண்டித்து இருக்கிறார். இதனால் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் இளம்பெண், ஜெபினுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பி இளம்பெண்ணின் வீட்டிற்கு உறவினர்களை அனுப்பி பெண் கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் பெண் கொடுக்க சம்மதிக்கவில்லை. பின்னர் இளம்பெண், ஜெபினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘நீ ஒரு சைக்கோ உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது, என்னை மறந்து விடு. எனது வீட்டிற்கு பெண் கேட்டு யாரையும் அனுப்பாதே’ என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஜெபின் நேற்று காதலியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். அங்கிருந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை செல்போனில் காட்டி நியாயம் கேட்டதோடு, இளம்பெண் வீட்டின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டார்.

இதனை ஒருவர் தட்டி கேட்டபோது, ‘இந்த பெண், அப்பா தூங்கிட்டாங்க, இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வா’ என என்னை அழைத்தவர் தான் என ஆவேசமாக கூறினார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜெபினை பிடித்து தக்கலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெபின் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக இளம்பெண்ணின் தந்தை விஜயராஜ் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ஜெபின் மீது ஆபாச படங்களை பொது வெளியில் காட்டுதல், அத்துமீறி வீட்டில் நுழைவது, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஜெபினை கைது செய்து தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சைக்கோ எனக்கூறி காதலை முறித்த இளம்பெண்: நியாயம் கேட்டு ரகளை செய்த இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Jebin ,Takkalai Anbu Nagar ,Kanyakumari district ,
× RELATED நாகர்கோவிலில் கோதுமை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது