×

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பி.இ., டிப்ளமோபடித்திருந்தால் போதும்

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பி.இ.,/டிப்ளமோ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி: Graduate Apprentice/Technical Apprentice

மொத்த இடங்கள்: 40.

உதவித் தொகை: Graduate Apprentice- Rs.9,000.
Technician Apprentice- Rs.8,000.

வயது: 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் பி.இ., அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 2020க்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்
.
பி.இ.,/டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.portal.mhrdnats.gov.in/announcements என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2023.

The post பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பி.இ., டிப்ளமோ
படித்திருந்தால் போதும்
appeared first on Dinakaran.

Tags : Aprantis ,BSNL ,Union Government ,Aprantis B. ,PSNL. ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு