×

திருநெல்வேலியில் இருந்து தென்காசி, விருதுநகர், மானாமதுரை வழியாக சென்னைக்கு புதிய ரயில்களை இயக்க சிவகாசியை சேர்ந்த பயணிகள் கோரிக்கை

சிவகாசி, ஏப். 13: திருநெல்வேலியில் இருந்து தென்காசி, விருதுநகர், மானாமதுரை வழியாக சென்னைக்கு புதிய ரயில்களை இயக்க சிவகாசியை சேர்ந்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை-தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அந்தியோதயா ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக அமைக்க பட்ட பிராட்கேஜ் வழித்தடத்தில் கூடுதல் ரயி்ல்கள் இயக்கப்படாமல் உள்ளன. விருதுநகர்-செங்கோட்டை, விருதுநகர்-மானாமதுரை, திருநெல்வேலி-தென்காசி, பொள்ளாச்சி-கோயமுத்தூர் ஆகிய வழித்தடங்களில் பகல் நேரத்தில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு, தென்காசி, சிவகாசி, விருதுநகர், மானாமதுரை வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும் என்று சிவகாசி பகுதியை சேர்ந்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கோட்டையில் இருந்து கோயமுத்தூருக்கு சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும். இது கோவையில் இருந்து தற்போது சென்னைக்கு புதிதாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு இணைப்பு ரயிலாக இயக்கப்பட வேண்டும். இதே போல் வசதி படைத்தவகளுக்கு மட்டுமே நன்மை தர கூடிய பிரிமியம் தட்கல் டிக்கெட் முறையை ரத்து செய்ய பேண்டும் என்று சிவகாசி பகுதியை சேர்ந்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருநெல்வேலியில் இருந்து தென்காசி, விருதுநகர், மானாமதுரை வழியாக சென்னைக்கு புதிய ரயில்களை இயக்க சிவகாசியை சேர்ந்த பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Tirunelveli ,Chennai ,Thenkasi, Virudhunagar, Manamadurai ,Thenkasi, ,Virudhunagar, ,Manamadurai ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து